ஏகலைவன் (EKALAIVAN)
இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களுள் ஒன்று மகாபாரதம் . குரு பக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறப்படுபவன் ஏகலைவன் ஆவான் . ஏகலைவன் மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களுள் ஒருவன் . இவன் மகத நாட்டைச் சேர்ந்த வேடுவர் குலத் தலைவனின் மகன் ஆவான் . இவன் வாழ்ந்த இடம் அஸ்தினாபுரத்திற்கு அருகில் இருந்தது . வில் வித்தை கற்றுக் கொண்டு அதில் தேர்ச்சி பெற்றவனாய் விளங்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தான் ஏகலைவன் .