இராமநாதசுவாமி திருக்கோயில் (RAMESWARAM TEMPLE)
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்லும் புண்ணியத் தலம் இராமேசுவரம் ஆகும் . கடல் பரப்புகளால் சூழப்பட்ட சிறிய தீவுதான் இராமேசுவரம் . அழகிய கட்டிடக் கலைக்கும் , நுண்ணிய வேலைப்பாடுகள் மிக்க சிற்பக் கலைக்கும் சிறந்த சான்றாக இராமேஸ்வரம் விளங்குகிறது . இராமாயண காவியத்தின் பழமை எவ்வளவோ , அவ்வளவு பழமையானது இராமேசுவரம் ஆலயமாகும் .