Posts

Showing posts from 2025

கரிகால சோழன் (KARIKALA CHOLAN)

       " தனக்கு ஒப்பாரும் இல்லை , தனக்கு மிக்காரும் இல்லை " என்ற புகழினைப் பெற்றவன் கரிகால சோழன் . கரிகால சோழனின் காலம் சங்க காலத்தைச் சேர்ந்ததாகும் . இவர் தந்தையின் பெயர் இளஞ்சேட்சென்னி . இச்சோழ மன்னனுக்கு பெருவளத்தான் , திருமாவளவன் , கரிகாற் பெருவளத்தான் , மாவளத்தான் , இயல் தேர் வளவன் , கரிகாலன் என்னும் பட்டப் பெயர்களும் உண்டு . கரிகால சோழன் காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டு வந்தான் . கரிகால சோழனின் காலம் என்பது கி . மு .270 முதல் கி . பி .180 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர் .      தமிழ் நாட்டில் இது காரும் ஆண்ட மன்னர்களில் இவனைப் போல வீரமும் , புகழும் உடைய மன்னர் யாரும் இல்லை என்பதே தமிழுலகு முழுவதும் கொண்ட பேச்சாகும் . சோழப் பேரரசை மீண்டும் நிலைநாட்டியதோடு , வடநாட்டுக்கும் சென்று , இமயத்தில் புலிக் கொடியை நாட்டிய பெருமை கரிகாற் பெருவளத்தானையேச் சேரும் .      கரிகால சோ...

வாலி வதைப் படலம்

              இராமாயணத்தில் இராவணனுக்கு இணையான வலிமை கொண்டவன் வாலி. அப்படிப்பட்ட வாலி இராமரால் வதம் செய்யப்பட்டதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் கதை

அழகர் கோவில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு பழைமையான ஆலயம் ஆகும் . ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் பல பெருமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது . 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இத்தலம் " திருமாலிருஞ்சோலை " என்றும் அழைக்கப்படுகிறது .   இங்கு கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜ பெருமாள் சங்கு , சக்கரம் , வில் , வாள் , கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார் . மதுரை மாவட்டத்தில் சித்திரைத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த விழாவாகும் . மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் , அதைத் தொடர்ந்து வரும் கள்ளழகர் ஆற்றில் இறங்கு வைபவமும் தூங்கா நகரமான மதுரையில் வெகு விமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது . தன் தங்கை மீனாட்சிக்கும் , சுந்தரேஸ்வர பெருமானுக்கும் திருமணம் நடக்கும் செய்தியைக் கேள்விப்பட்டு , அழகர் சுந்தரராஜப் பெருமாள் , கள்ளழகர் திருக்கோலத்துடன் அழகர் மலையிலிருந்து இறங்கி , சகல கொண்டாட்டத்துடன் மதுரையை நோக்கி வருகிறார் . வரும் வழி எங்கும் தம் பக்தர்களுக்கு காட்ச...

திருவிடந்தை நித்திய கல்யாணப் பெருமாள் திருக்கோயில்

Image
  சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவிடந்தை என்னும் ஊரில் அமைந்துள்ள பழமையான கோயில் நித்திய கல்யாணப் பெருமாள் கோயில் ஆகும் . இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் . ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் , திருமணத் தடையை நீக்கும் தலமாக விளங்குகிறது . இக்கோயிலின் புராணப் பெயர் வராகபுரி ஆகும் . வராக பெருமாளின் அவதாரத்தைக் குறிக்கும் வகையில் இப்பெயர் அமைந்துள்ளது .                                  தல வரலாறு காலவ முனிவர் என்பவர் வராகபுரியில் வாழ்ந்து வந்தார் . அவருக்கு 360 பெண் குழந்தைகள் இருந்தனர் . 360 பெண்களும் அழகிலும் , அறிவிலும் சிறந்து விளங்கியதுடன் , வராக மூர்த்தியிடம் மிகுந்த அன்பு கொண்டு திகழ்ந்தனர் . தனது பெண்களுக்கு திருமணம் ஆக வேண்டி காலவ முனிவர் , வராகப் பெருமாளைப் பிரார்த்தனை செய்து வந்தார் . அதற்காக கடுமையான தவம் செய்து வந்தார் . ஒரு நாள் வராகப் பெருமாள் , பிரம்மச்சா...

ஏகலைவன் (EKALAIVAN)

இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களுள் ஒன்று மகாபாரதம் . குரு பக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறப்படுபவன் ஏகலைவன் ஆவான் . ஏகலைவன் மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களுள் ஒருவன் . இவன் மகத நாட்டைச் சேர்ந்த வேடுவர் குலத் தலைவனின் மகன் ஆவான் . இவன் வாழ்ந்த இடம் அஸ்தினாபுரத்திற்கு அருகில் இருந்தது . வில் வித்தை கற்றுக் கொண்டு அதில் தேர்ச்சி பெற்றவனாய் விளங்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தான் ஏகலைவன் .

பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் ( BAVANI SANGAMESWARAR TEMPLE)

Image
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொன்மை வாய்ந்த ஆலயங்களில் ஒன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் ஆகும் . இவ்வாலயம் தேவாரப் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலமாகும் . இத்தல இறைவர் சங்கமேஸ்வரர் , அளகேசன் , சங்கமநாதர் , மருத்துவலிங்கம் , வானிலிங்கேஸ்வரர் , வக்கிரேஸ்வரன் , நட்டாற்றீஸ்வரன் , திருநண்ணாவுடையார் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார் . கோயிலின் தல விருட்சம் இலந்தை மரம் ஆகும் . இத்தல அம்மை வேதநாயகி , பவானி , சங்கமேஸ்வரி , பண்ணார் மொழியம்மை , பந்தார் விரலம்மை , மருத்துவ நாயகி வக்கிரேஸ்வரி எனப் பல பெயர்களில் அன்புடன் அழைக்கப்படுகிறார் . இத்தலத்திற்கு பத்மகிரி என்ற பெயர் உண்டு . இதைச் சுற்றிலும் நாககிரி , வேதகிரி , மங்களகிரி , சங்ககிரி உள்ளது . வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் தலம் திரிவேணி சங்கமம் என அழைக்கப்படுகிறது . இங்கு சரஸ்வதி கண்ணுக்குத் தெரிவதில்லை . அது போல தென்னகத்தில் காவிரியுடன் பவானி மற்றும் அமுத நதி ஆகிய மூன்று நதிகளும் இத்தலத்தில் சங்கமிக்கின்றன . இதில் அமிர்த நதி கண்ணுக்குத்...