Posts

Showing posts from 2025

ஸ்டீபன் ஹாக்கிங் (STEPHEN HAWKING)

Image
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் தன்னம்பிக்கையின் அடையாளமாகப் போற்றப்படுகிறார் . இவர் 1942 ம் வருடம் ஜனவரி 8 ம் தேதியன்று , இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு நகரில் , பிராங்கு , இசபெல் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் . இவர் 1959 ம் ஆண்டு உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் இடம் கிடைத்தவுடன் , தன் விருப்பப்பாடமாகிய இயற்கை அறிவியலை தேர்வு செய்து படிக்கத் தொடங்கினார் . பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் .

இராமாயணம்- அயோத்தியா காண்டம் (RAMAYANAM- AYODHYA KANDAM)

Image
  இராமரும் சீதையும் பன்னிரெண்டு ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். இருவரும் உள்ளார்ந்த அன்புடன் வாழ்ந்து வந்தனர். தயரதன் தன் புதல்வர்களில் இராமனிடம் பெரும் அன்பு பூண்டிருந்தான்.

இராமாயணம் - பால காண்டம் (RAMAYANAM- BALA KANDAM)

Image
                                                                                                         பாலகாண்டம்        கோசல நாடு நீர் வளமும் நில வளமும் மிக்க நாடு. அனைத்து வளங்களும் நிறைந்த கோசல நாட்டில் மக்கள் நல்வாழ்வு வாழ்ந்து வந்தனர். நாட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருந்ததால் மக்கள் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. எல்லோருடைய சிந்தையிலும் செம்மைப் பண்பு இருந்ததால் சினம் இல்லை. நாட்டில் மக்கள் நல்லறம் புரிந்து இனிதே வாழ்ந்து வந்ததால் எங்கும் ஏற்றம் அல்லது இறக்கம் இல்லை.

மானசரோவர் (MANSAROVAR)

Image
  உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள நன்னீர் ஏரி மானசரோவர் ஏரி ஆகும் . இது கயிலை மலையின் அருகில் திபெத் நாட்டில் அமைந்துள்ளது . கடல் மட்டத்தில் இருந்து 14948 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த ஏரியானது அதிகபட்சமாக 300 அடி ஆழம் இருக்கும் எனக் கூறப்படுகிறது .

அண்ணாமலையார் கோவில் ஏற்காடு (YERCAUD ANNAMALAIYAR TEMPLE)

Image
  இயற்கை எழில் சூழ்ந்த சேர்வராயன் மலைத் தொ டரில் அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ளது . விண்ணைத் தொடும் நெடிய மரங்களுக்கும் , அழகிய மலைத் தொடர்களுக்கும் நடுவே அண்ணாமலையார் கோவில் அமைதியின் இருப்பிடமாக விளங்குகிறது .

முகிற்பேழ் மழை என்கின்ற மேகவெடிப்பு (CLOUDBURST)

Image
  முகிற்பேழ் மழை என்பது சில நிமிடங்களில் மிக அதிக அளவிலான மழை பொழிவதாகும் . இம்மழையானது பெரும்பாலும் பலத்த இடியுடன் ஆலங்கட்டி மழையாகப் பெய்யும் . முகிற்பேழ் மழை என்கின்ற மேகவெடிப்பு பெரும்பாலும் மலைப்பிரதேசங்களில் அதிகமாக நிகழ்கின்றது . சுமார் இருபது முதல் முப்பது சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டருக்கு மேல் மழைப் பொழிவு ஏற்பட்டால் அது மேக வெடிப்பு எனக் கணக்கிடப்படுகிறது.

திருத்தணி சுப்ரமணியசுவாமி திருக்கோவில்

Image
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திருத்தணி திகழ்கின்றது . சூரனை வதம் செய்த பிறகு , முருகன் இங்கு வந்து சினம் தணிந்ததால் இத்தலம் " திருத்தணிகை " என்று பெயர் பெற்றது . பின்னர் அது மருவி திருத்தணி என வழங்கப்படுகிறது . முருகப் பெருமான் வள்ளி , தெய்வானையை மணம் செய்து கொண்ட தலம் இதுவாகும் .

ஔவையும் முருகனும் - AVVAIYAR MURUGAN

  தமிழ் போற்றும் பெண்பாற் புலவர் ஔவையார் . இவரின் சிறப்பியல்புகள் எண்ணற்றவை . தமிழறிவுடன் பிறந்த ஔவை கவி பாடுவதில் வல்லவர் . அறம் , பொருள் , இன்பம் , வீடு என அனைத்தும் உணர்ந்தவர் . தமிழ் இலக்கிய வரலாற்றில் ஔவையார் என்ற பெயரில் பெண்பாற் புலவர்கள் பலர் இருந்துள்ளனர் . முருகனுடன் பாடி உள்ளம் மகிழ்ந்த ஔவை சங்க காலத்தைச் சேர்ந்தவர் . இவர் அதியமான் காலத்தைச் சார்ந்தவர் . பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் " கொன்றை வேந்தன் " என்னும் நீதி நூலை எழுதி உள்ளார்.

கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தல்

சின்னக் கண்ணனின் குறும்புகள் அனைத்துமே படிப்பவர் , கேட்பவர் என அனைவர்   உள்ளத்தையுமே கவரக்கூடியது என்றால் அது மிகையாகாது . கிருஷ்ணரின் கதைகளில் ஒன்றினை இப்பதிவில் காண்போம் . விருந்தாவனத்தின் ஆயர்கள் இந்திரனுக்காக ஏற்பாடு செய்திருந்த யாகத்தினை கிருஷ்ணர் தடுத்து விட்டார் என அறிந்த இந்திரன் மிகவும் கோபம் கொண்டான் . எனவே இந்திரன் தனது கோபத்தை விருந்தாவனத்தின் மக்கள் மீது காட்டினான் . யாகம் நிறுத்தப்பட்டதற்கு கிருஷ்ணரே காரணம் என இந்திரன் அறிந்திருந்தாலும் , நந்த கோபர் ஆட்சியின் கீழ் உள்ள மக்களின் மேல் தன் கோபத்தைக் காட்டினான் . தானே மூவுலகுக்கும் அதிபதி என்ற கர்வம் கொண்டவனும் , கோபம் கொண்டவனுமான இந்திரன் பிரளயத்தைச் செய்யக் கூடியதுமாண " ஸாம் வர்த்தகம் " என்னும் மேகக் கூட்டத்தை அழைத்தான் . விருந்தாவணத்தின் மேல் படர்ந்து அப்பகுதி முழுவதையும் பெரு வெள்ளத்தில் மூழ்கடிக்கும் படி இந்திரன் " ஸாம் வர்த்தக " மேகத்துக்குக் கட்டளையிட்டான் . இவ்வாறு இந்திரனால் கட்டளையிடப்பட்டு ஏவப்பட்ட மேகக் கூட...

கரிகால சோழன் (KARIKALA CHOLAN)

       " தனக்கு ஒப்பாரும் இல்லை , தனக்கு மிக்காரும் இல்லை " என்ற புகழினைப் பெற்றவன் கரிகால சோழன் . கரிகால சோழனின் காலம் சங்க காலத்தைச் சேர்ந்ததாகும் . இவர் தந்தையின் பெயர் இளஞ்சேட்சென்னி . இச்சோழ மன்னனுக்கு பெருவளத்தான் , திருமாவளவன் , கரிகாற் பெருவளத்தான் , மாவளத்தான் , இயல் தேர் வளவன் , கரிகாலன் என்னும் பட்டப் பெயர்களும் உண்டு . 

வாலி வதைப் படலம்

              இராமாயணத்தில் இராவணனுக்கு இணையான வலிமை கொண்டவன் வாலி. அப்படிப்பட்ட வாலி இராமரால் வதம் செய்யப்பட்டதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் கதை

அழகர் கோவில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு பழைமையான ஆலயம் ஆகும் . ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் பல பெருமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது . 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இத்தலம் " திருமாலிருஞ்சோலை " என்றும் அழைக்கப்படுகிறது .   இங்கு கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜ பெருமாள் சங்கு , சக்கரம் , வில் , வாள் , கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார்.

திருவிடந்தை நித்திய கல்யாணப் பெருமாள் திருக்கோயில்

Image
  சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவிடந்தை என்னும் ஊரில் அமைந்துள்ள பழமையான கோயில் நித்திய கல்யாணப் பெருமாள் கோயில் ஆகும் . இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் . ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் , திருமணத் தடையை நீக்கும் தலமாக விளங்குகிறது . இக்கோயிலின் புராணப் பெயர் வராகபுரி ஆகும் . வராக பெருமாளின் அவதாரத்தைக் குறிக்கும் வகையில் இப்பெயர் அமைந்துள்ளது .

ஏகலைவன் (EKALAIVAN)

இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களுள் ஒன்று மகாபாரதம் . குரு பக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறப்படுபவன் ஏகலைவன் ஆவான் . ஏகலைவன் மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களுள் ஒருவன் . இவன் மகத நாட்டைச் சேர்ந்த வேடுவர் குலத் தலைவனின் மகன் ஆவான் . இவன் வாழ்ந்த இடம் அஸ்தினாபுரத்திற்கு அருகில் இருந்தது . வில் வித்தை கற்றுக் கொண்டு அதில் தேர்ச்சி பெற்றவனாய் விளங்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தான் ஏகலைவன் .

பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் ( BAVANI SANGAMESWARAR TEMPLE)

Image
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொன்மை வாய்ந்த ஆலயங்களில் ஒன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் ஆகும் . இவ்வாலயம் தேவாரப் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலமாகும் . இத்தல இறைவர் சங்கமேஸ்வரர் , அளகேசன் , சங்கமநாதர் , மருத்துவலிங்கம் , வானிலிங்கேஸ்வரர் , வக்கிரேஸ்வரன் , நட்டாற்றீஸ்வரன் , திருநண்ணாவுடையார் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார் . கோயிலின் தல விருட்சம் இலந்தை மரம் ஆகும் . இத்தல அம்மை வேதநாயகி , பவானி , சங்கமேஸ்வரி , பண்ணார் மொழியம்மை , பந்தார் விரலம்மை , மருத்துவ நாயகி வக்கிரேஸ்வரி எனப் பல பெயர்களில் அன்புடன் அழைக்கப்படுகிறார் .

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோயில் (THIRUCHENDUR MURUGAN TEMPLE)

Image
முருகனின் அறுபடை வீடுகளில் , இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் விளங்குகின்றது . இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களில் " சேயோன் " எனக் குறிப்பிடப்படுகிறது.

கேதார்நாத் ஆலயம் (KEDARNATH TEMPLE)

Image
  இந்தியாவில் உள்ள பன்னிரண்டு சோதிர்லிங்க சிவத்தலங்களில் ஒன்று கேதார்நாத் கோவில் ஆகும். இவ்வாலயம் உத்திராகாண்ட் மாநிலத்தில், மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஆறு மாதங்கள் மட்டுமே (ஏப்ரல் மாதம் முதல் தீபாவளித் திருநாள் வரை) பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டிருக்கும். குளிர் காலங்களில் கோயிலில் உள்ள விக்கிரகங்கள் குப்தகாசியில் உள்ள உகிமத் மடத்திற்கு கொண்டு வரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. 

மச்சாவதாரம் (MACHA AVATHAARAM)

Image
  தசாவதாரத்தில் முதல் அவதாரம் மச்சாவதாரம் ஆகும். "உலகில் அதர்மம் அதிகமாகும் பொழுது, தர்மத்தினை நிலைநாட்டுவதற்காக நான் இப்புவியில் அவதாரம் எடுக்கின்றேன்" என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லுகிறார். வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டவர் பரம்பொருள் திருமால். இப்பூவுலகினைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்களை அவர் எடுத்தார். சிறப்புக்கள் மிக்க திருமாலின் அவதாரங்களை தசாவதாரம் என்று கூறுவர்.

கும்பகர்ணன் வதைப் படலம்

      இராவணன்   கும்பகர்ணனை அழைத்து வருமாறு பணியாளரை அனுப்பினான் . அவர்கள் கும்பகர்ணன் அரண்மனையை அடைந்தனர் .

மகாபாரதத்தில் அம்பை (AMBA IN MAHABHARATA)

  இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். இதில் வரும் பெண் கதாபாத்திரமாகிய அம்பை பற்றி இப்பதிவில் காண்போம். அம்பை காசி மன்னனின் மூத்த புதல்வி ஆவார். அம்பிகா, அம்பாலிகா என்போர் இவளது தங்கைகளாவர். காசி மன்னன் தன் புதல்விகள் மூவருக்கும் திருமணம் செய்விக்க வேண்டி, சுயம்வரம் ஏற்பாடு செய்தார். பல அரசர்கள் காசிக்கு வந்திருந்தார்கள். அஸ்தினாபுரத்தில் இருந்து விசித்திரவீரியனும், அவனுக்குத் துணையாக பீஷ்மரும் காசிக்குச் சென்றிருந்தார்கள்.

மயிலாப்பூர் கபாலிஸ்வரர் ஆலயம் (KAPALEESWARAR TEMPLE)

Image
சென்னையில் உள்ள முதன்மையான ஆலயங்களில் ஒன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயமாகும் . மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகிறது . இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டதாகும் . மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இத்தலம் மிகவும் புகழ் பெற்று விளங்கியதாகக் கூறப்படுகிறது .