Posts

Showing posts from 2024

இலட்சுமணனின் வீரமும் தியாகமும்(LAKSHMAN'S SACRIFICE)

Image
  இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களுள் ஒன்று இராமாயணம் . இராமாயணக் காதையில் இராமருக்கு பக்கபலமாகவும் , துணையாகவும்   இருந்த இலட்சுமணனைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம் . இவர் ஆதிஷேசனின் அவதாரம் ஆவார் . இராமாயணத்தில் கூனியின் துர்போதனையைக் கேட்டு கைகேயி இராமரைப் பதினான்கு வருடம் வனவாசம் செல்லப் பணித்தாள் . இராமர் பதினான்கு வருடம் வனவாசம் செல்ல முடிவு செய்த போது , அவருக்குத் துணையாகத் தானும் வருவதாக இலட்சுமணன் கூறினார் . இராமரும் தம் தமையனின் அன்பின் மிகுதியை எண்ணி , இலட்சுமணனைத் தன்னோடு கானகம் அழைத்துச் செல்ல சம்மதம் தெரிவித்தார் . எனவே சீதா இராமரோடு இலட்சுமணனும் மரவுரி தரித்து , கானகம் புறப்பட்டார். இலட்சுமணன் தன் மனைவியாகிய ஊர்மிளையிடம் , இராமரோடு தான் கானகம் செல்லும் செய்தியைக் கூறினார் . உடனே ஊர்மிளை தானும் இலட்சுமணனோடு   வருவதாகத் தன் விருப்பத்தைத் தெரிவித்தாள் . அதற்கு   இலட்சுமணன் ஊர்மிளையிடம் , தான் இராமருக்கும் , சீதைக்கும் துணையாக கானகம் செல்வதாகவும் , வனத்தில் அவர்களுக்கு ஏற்படும் ஆ...

சென்னையின் வரலாறு (HISTORY OF CHENNAI)

Image
சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம் என்பதோடு அல்லாமல் இந்தியாவின் முதல் மாநகராட்சி என்ற பெருமையையும் கொண்டது . சென்னை வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த ஒரு துறைமுக நகரம் ஆகும் . 17 ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் கால் பதித்தது முதல் சென்னை முக்கிய நகரமாக வளர்ந்து வருகின்றது . ' வந்தாரை வாழ வைக்கும் சென்னை ' மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது . 1639 ம் ஆண்டு ஆகஸ்டு 22 ம் தேதி , தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் சென்னை உருவானது . அன்றைய தினம் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே , ஆண்ட்ரு கோகன் ஆகியோர் , இப்போது புனித ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள் . ஓராண்டிற்குப் பின் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது . அந்தக் கோட்டையை மையமாகக் கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது . கிழக்கிந்தியக் கம்பெனி , புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்ட தேர்வு செய்த இடத்தில் சென்னப்பட்டினம் , மதராசப்பட்டினம் என்ற இரண்டு கிராமங்கள் இருந்துள்ளன . இந்த இரண்டு ஊர்களின் இணைப்பில் உருவான நிலப்பரப்பே த...

திருப்பாண்டிக் கொடுமுடி (KODUMUDI TEMPLE)

Image
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம் சிறப்புக்கள் பல கொண்ட தொன்மை வாய்ந்த ஆலயம் ஆகும் . தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக பாண்டிக் கொடுமுடி விளங்குகிறது . இவ்வாலயத்தின் தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது . இம்மரம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது . ஆனால் சிலர் இம்மரம் அதையும் விட பழமையானது என்றும் , இதன் வயதைக் கணக்கிட முடியவில்லை என்றும் கூறுகின்றனர் . இவ்வாலயத்தில் சிவன் , பிரம்மா , திருமால் ஆகிய மும்மூர்த்திகளும் கோவில் கொண்டிருப்பது சிறப்பு மிக்கதாகும் . மகுடேஸ்வரர் சன்னிதிக்கும் , வடிவுடைய நாயகி சன்னதிக்கும் நடுவில் வீர நாராயணப் பெருமாள் - மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன . மேலும் வன்னி மரத்தடியில் பிரம்மாவின் சன்னதி அமைந்துள்ளது . திருவண்ணாமலையில் மலையே சிவனாக இருப்பதாக ஐதீகம் . அது போல , இங்கு மலையின் முடியே சிவலிங்கமாக காட்சியளிப்பதால் , இத்தலம் கொடுமுடி என்று அழைக்கப்படுகிறது . இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாவார் . மலையத்துவச பாண்டியன் இக்கோவிலுக்கு மூன்று க...

காபி பற்றிய சுவையான தகவல்கள் (INTERESTING FACTS ABOUT COFFEE)

Image
நாம் தினமும் காலையில் சுவைத்து மகிழும் காபி , நமக்கு புத்துணர்வையும் , ஆற்றலையும் அளிக்கிறது . காபி முதன் முதலில் எவ்வாறு கண்டறியப்பட்டது என்னும் செய்தி நமக்கு வியப்பையும் , ஆச்சரியத்தையும் அளிக்கலாம் . உலகிலேயே அதிக அளவு இறக்குமதி , ஏற்றுமதி செய்யப்படும் பொருளாக பெட்ரொலியம் உள்ளது . அதற்கு அடுத்த படியாக உலகிலேயே அதிகமாக விற்று , வாங்கக் கூடிய பொருளாக காபி இரண்டாவது இடத்தில் உள்ளது . காபி உலகில் ஐம்பதுக்கும் அதிகமான நாடுகளில் ஏறக்குறைய 10 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது . இன்று 100 மில்லியன் மக்களின் வாழ்க்கை ஊதியம் காபிப் பயிரை ஒட்டி நடக்கிறது . தினமும் தோராயமாக 2.25 பில்லியன் கோப்பை ( cup) காபிகள் உலகம் முழுவதும் உள்ள மக்களால் சுவைக்கப்படுகின்றன . காபி எவ்வாறு உலகுக்கு அறிமுகமானது ? அந்த சுவையான கதையை இனி பார்ப்போம் . ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர்கள் சிலர் ஒரு நாள் , தங்கள் ஆடுகளில் சில அதிக ஆட்டத்துடன் உலாவி வந்ததையும் , இரவிலும் தூங்காமல்...

சென்டினல் மக்கள் ( THE SENTINELESE)

Image
யார் இந்த சென்டினல் மக்கள் ? இவர்கள் எங்கு வாழ்கிறார்கள் ? இந்தியப் பெருங்கடலில் உள்ள அந்தமான் நிக்கோபர் தீவுகளில் ஒன்று தான் வடக்கு சென்டினல் தீவு . இங்கு வாழும் மக்களே சென்டினல் பழங்குடியின மக்கள் . இவர்கள் வெளியுலக மக்களைப் பார்க்க விரும்பாமல் அந்தமான் தீவின் அடர்ந்த காடுகளில் வாழ்கின்றனர் . இப்பழங்குடியின மக்கள் வில் அம்பு கொண்டு காட்டு விலங்குகளை வேட்டையாடி உண்டு வாழ்கின்றனர் . சென்டினல் மக்கள் வெளி உலக மக்களிடம் தொடர்பு கொள்வதை வெறுக்கிறார்கள் . இந்திய அரசாங்கம் இம்மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு , அத்தீவிற்கு யாரும் செல்லக் கூடாது என தடை விதித்துள்ளது . வெளி உலக தொடர்பின்றி வாழும் அப்பழங்குடியின மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் , இச்சட்டதை இந்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. 2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலை இம்மக்களைப் பாதிக்கவில்லை . அவர்கள் முன் கூட்டியே சுனாமி வருவதை அறிந்து , உயரமான பகுதிகளிலும் , மரங்களின் மீது ஏறியும் உயிர் பிழைத்துள்ளனர் . சென்டினல் பூர்வீக பழ...