அண்ணாமலையார் கோவில் ஏற்காடு (YERCAUD ANNAMALAIYAR TEMPLE)

இயற்கை எழில் சூழ்ந்த சேர்வராயன் மலைத் தொ டரில் அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ளது . விண்ணைத் தொடும் நெடிய மரங்களுக்கும் , அழகிய மலைத் தொடர்களுக்கும் நடுவே அண்ணாமலையார் கோவில் அமைதியின் இருப்பிடமாக விளங்குகிறது . இக்கோவில் 13 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது எனக் கூறப்படுகிறது . கோவிலின் கட்டமைப்பு திராவிடக் கட்டிடக் கலையைக் கொண்டு அமைந்துள்ளது . இக்கோவில் ஏற்காடு ஏரியிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் தலைச்சோலை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது . இவ்வழகிய சிவாலயம் வானளாவிய மலைத் தொடர்களுக்கு நடுவே இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் மிக ரம்மியமாகக் காட்சியளிக்கிறது . இவ்வாலயம் கடல் மட்டத்தில் இருந்து 1400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது . மூலவராக அண்ணாமலையார் காட்சியளிக்கிறார் . இடப்புறத்தில் விநாயகப் பெருமானும் , வலப்புறத்தில் முருகப் பெருமான் வள்ளி , தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார்கள் . இவ்வாலயத்தில் கோபுரங்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் வண்ண மயமாக காட்சி அளிக்கின்றன . கோபுரங்களில் சிற்ப வேலைப்பாடுகள் திராவிட ...