Posts

ஸ்டீபன் ஹாக்கிங் (STEPHEN HAWKING)

Image
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் தன்னம்பிக்கையின் அடையாளமாகப் போற்றப்படுகிறார் . இவர் 1942 ம் வருடம் ஜனவரி 8 ம் தேதியன்று , இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு நகரில் , பிராங்கு , இசபெல் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் . இவர் 1959 ம் ஆண்டு உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் இடம் கிடைத்தவுடன் , தன் விருப்பப்பாடமாகிய இயற்கை அறிவியலை தேர்வு செய்து படிக்கத் தொடங்கினார் . பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் .

இராமாயணம்- அயோத்தியா காண்டம் (RAMAYANAM- AYODHYA KANDAM)

Image
  இராமரும் சீதையும் பன்னிரெண்டு ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். இருவரும் உள்ளார்ந்த அன்புடன் வாழ்ந்து வந்தனர். தயரதன் தன் புதல்வர்களில் இராமனிடம் பெரும் அன்பு பூண்டிருந்தான்.

இராமாயணம் - பால காண்டம் (RAMAYANAM- BALA KANDAM)

Image
                                                                                                         பாலகாண்டம்        கோசல நாடு நீர் வளமும் நில வளமும் மிக்க நாடு. அனைத்து வளங்களும் நிறைந்த கோசல நாட்டில் மக்கள் நல்வாழ்வு வாழ்ந்து வந்தனர். நாட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருந்ததால் மக்கள் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. எல்லோருடைய சிந்தையிலும் செம்மைப் பண்பு இருந்ததால் சினம் இல்லை. நாட்டில் மக்கள் நல்லறம் புரிந்து இனிதே வாழ்ந்து வந்ததால் எங்கும் ஏற்றம் அல்லது இறக்கம் இல்லை.

மானசரோவர் (MANSAROVAR)

Image
  உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள நன்னீர் ஏரி மானசரோவர் ஏரி ஆகும் . இது கயிலை மலையின் அருகில் திபெத் நாட்டில் அமைந்துள்ளது . கடல் மட்டத்தில் இருந்து 14948 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த ஏரியானது அதிகபட்சமாக 300 அடி ஆழம் இருக்கும் எனக் கூறப்படுகிறது .

அண்ணாமலையார் கோவில் ஏற்காடு (YERCAUD ANNAMALAIYAR TEMPLE)

Image
  இயற்கை எழில் சூழ்ந்த சேர்வராயன் மலைத் தொ டரில் அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ளது . விண்ணைத் தொடும் நெடிய மரங்களுக்கும் , அழகிய மலைத் தொடர்களுக்கும் நடுவே அண்ணாமலையார் கோவில் அமைதியின் இருப்பிடமாக விளங்குகிறது .

முகிற்பேழ் மழை என்கின்ற மேகவெடிப்பு (CLOUDBURST)

Image
  முகிற்பேழ் மழை என்பது சில நிமிடங்களில் மிக அதிக அளவிலான மழை பொழிவதாகும் . இம்மழையானது பெரும்பாலும் பலத்த இடியுடன் ஆலங்கட்டி மழையாகப் பெய்யும் . முகிற்பேழ் மழை என்கின்ற மேகவெடிப்பு பெரும்பாலும் மலைப்பிரதேசங்களில் அதிகமாக நிகழ்கின்றது . சுமார் இருபது முதல் முப்பது சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டருக்கு மேல் மழைப் பொழிவு ஏற்பட்டால் அது மேக வெடிப்பு எனக் கணக்கிடப்படுகிறது.

திருத்தணி சுப்ரமணியசுவாமி திருக்கோவில்

Image
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திருத்தணி திகழ்கின்றது . சூரனை வதம் செய்த பிறகு , முருகன் இங்கு வந்து சினம் தணிந்ததால் இத்தலம் " திருத்தணிகை " என்று பெயர் பெற்றது . பின்னர் அது மருவி திருத்தணி என வழங்கப்படுகிறது . முருகப் பெருமான் வள்ளி , தெய்வானையை மணம் செய்து கொண்ட தலம் இதுவாகும் .

ஔவையும் முருகனும் - AVVAIYAR MURUGAN

  தமிழ் போற்றும் பெண்பாற் புலவர் ஔவையார் . இவரின் சிறப்பியல்புகள் எண்ணற்றவை . தமிழறிவுடன் பிறந்த ஔவை கவி பாடுவதில் வல்லவர் . அறம் , பொருள் , இன்பம் , வீடு என அனைத்தும் உணர்ந்தவர் . தமிழ் இலக்கிய வரலாற்றில் ஔவையார் என்ற பெயரில் பெண்பாற் புலவர்கள் பலர் இருந்துள்ளனர் . முருகனுடன் பாடி உள்ளம் மகிழ்ந்த ஔவை சங்க காலத்தைச் சேர்ந்தவர் . இவர் அதியமான் காலத்தைச் சார்ந்தவர் . பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் " கொன்றை வேந்தன் " என்னும் நீதி நூலை எழுதி உள்ளார்.

கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தல்

சின்னக் கண்ணனின் குறும்புகள் அனைத்துமே படிப்பவர் , கேட்பவர் என அனைவர்   உள்ளத்தையுமே கவரக்கூடியது என்றால் அது மிகையாகாது . கிருஷ்ணரின் கதைகளில் ஒன்றினை இப்பதிவில் காண்போம் . விருந்தாவனத்தின் ஆயர்கள் இந்திரனுக்காக ஏற்பாடு செய்திருந்த யாகத்தினை கிருஷ்ணர் தடுத்து விட்டார் என அறிந்த இந்திரன் மிகவும் கோபம் கொண்டான் . எனவே இந்திரன் தனது கோபத்தை விருந்தாவனத்தின் மக்கள் மீது காட்டினான் . யாகம் நிறுத்தப்பட்டதற்கு கிருஷ்ணரே காரணம் என இந்திரன் அறிந்திருந்தாலும் , நந்த கோபர் ஆட்சியின் கீழ் உள்ள மக்களின் மேல் தன் கோபத்தைக் காட்டினான் . தானே மூவுலகுக்கும் அதிபதி என்ற கர்வம் கொண்டவனும் , கோபம் கொண்டவனுமான இந்திரன் பிரளயத்தைச் செய்யக் கூடியதுமாண " ஸாம் வர்த்தகம் " என்னும் மேகக் கூட்டத்தை அழைத்தான் . விருந்தாவணத்தின் மேல் படர்ந்து அப்பகுதி முழுவதையும் பெரு வெள்ளத்தில் மூழ்கடிக்கும் படி இந்திரன் " ஸாம் வர்த்தக " மேகத்துக்குக் கட்டளையிட்டான் . இவ்வாறு இந்திரனால் கட்டளையிடப்பட்டு ஏவப்பட்ட மேகக் கூட...

கரிகால சோழன் (KARIKALA CHOLAN)

       " தனக்கு ஒப்பாரும் இல்லை , தனக்கு மிக்காரும் இல்லை " என்ற புகழினைப் பெற்றவன் கரிகால சோழன் . கரிகால சோழனின் காலம் சங்க காலத்தைச் சேர்ந்ததாகும் . இவர் தந்தையின் பெயர் இளஞ்சேட்சென்னி . இச்சோழ மன்னனுக்கு பெருவளத்தான் , திருமாவளவன் , கரிகாற் பெருவளத்தான் , மாவளத்தான் , இயல் தேர் வளவன் , கரிகாலன் என்னும் பட்டப் பெயர்களும் உண்டு .