Posts

Showing posts from October, 2023

சின்னக் கண்ணனின் குறும்புகள்

ஒரு நாள் யசோதை தன் வீட்டில் தயிர் கடைந்து கொண்டிருந்தாள் . அப்பொழுது சின்னக்கண்ணன் தன் தாய் யசோதையிடம் வந்து தயிர்கடையும் மத்தைப் பிடித்துக் கொண்டு தடுத்தார் . மடியின் மீது வந்து ஏறிய குழந்தையைப் புன்னகையுடன் பார்த்தாள் யசோதை . அப்பொழுது அவள் அடுப்பில் ஏற்றியிருந்த பால் பொங்கி வழிவதைக் கண்டதும் பாலக்கிருஷ்ணனை விட்டு விட்டு , வேகமாக பால் பாத்திரத்தை கீழே எடுத்து வைக்கச் சென்றாள் . அதனால் கோபம் கொண்ட சின்னக்கண்ணன் , தயிர் ஏடுள்ள சட்டியை உடைத்து விட்டு , கண்களில் பொய்யாகக் கண்ணீரை வரவழைத்துக் கொண்டு , வீட்டினுள்ளே ஒருவரும் அறியாத இடத்திற்கு சென்று வெண்ணையை எடுத்து தின்று கொண்டிருந்தார் .

கடல் தாண்டும் அனுமன்(HANUMAN STORY)

  அனுமன் மகேந்திர மலை உச்சியில் விஸ்வரூபம் எடுத்து நின்றான். அவன் மனத்துள் இராம நாமத்தை உச்சரித்துக் கொண்டான். இலங்கை அவன் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

சீதாராமர் திருமணம்(SITA RAMAR THIRUMANAM)

Image
  மிதிலை நகருக்குள் இராமர், இலக்குவர், விசுவாமித்திரர் மூவரும் பிரவேசித்தனர். தன் தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்த சீதை இராமரை நோக்கினாள்.

அதிபத்த நாயனார்

  சூரிய குலத்தின் மன்னர்கள் நல்லாட்சி புரிந்து வரும் வளமிக்க நாடு சோழ நாடு. ஓயாது ஒலிக்கும் கடல் அலைகளின் பேரொலியைக் கொண்ட ஊர் நாகப்பட்டிணம். இவ்வூரின் மக்கள் மீன் பிடிக்கும் தொழிலின் மூலம் வருவாய் ஈட்டி வாழ்ந்து வந்தனர். அங்குள்ள நுளைபாடி என்னும் மீனவக் குப்பத்தின் தலைவராக அதிபத்தர் விளங்கினார். அவர் கங்கையையும், பிறைச் சந்திரனையும் தலையில் சூடிய சிவபெருமானுக்குத் தொண்டு புரிபவராவார். 

நவராத்திரி விழா

       இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் நவராத்திரி முதன்மையானது . நவராத்திரி விழாவானது நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது . ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவில் முதல் மூன்று நாட்கள் வீரத்தை வேண்டி துர்கையையும், அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை வேண்டி லட்சுமியையும், அடுத்த மூன்று நாட்கள் கல்வியை வேண்டி சரஸ்வதியையும் வழிபடுகிறார்கள் . பத்தாவது நாள் வெற்றியின் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது . இது விஜய தசமி எனவும் அழைக்கப்படுகிறது . மூன்று மகாசக்திகளையும் வழிபடுவதனால் கல்வி, செல்வம், வீரம் என்னும் வளங்களைப் பெறலாம் .