Posts

Showing posts from November, 2023

இராவணன் முன் அனுமன்(HANUMAN STORY)

  அனுமன் பிடிபட்ட செய்தி இராவணனுக்கு தெரிவிக்கப்பட்டது . அவன் நற்செய்தி கூறிய தூதுவர்க்கு பரிசளித்தான் . அனுமனைக் கொல்லாமல் கொண்டு வரும் படி ஆணையிட்டான் .

கைகேயி கேட்ட வரம்

       கைகேயின் தோழி கூனி என்கின்ற மந்தரை . அவள் பெரிய அரசியல் தந்திரி . உலகிற்கெல்லாம் துன்பம் செய்யும் இராவணனைக் காட்டிலும் மிகு தீமை செய்யும் கொடுமனக்கூனி தோன்றினாள் , என்று கம்பர் கூறுகிறார் .

மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் (MADURAI MEENAKSHIAMMAN TEMPLE)

   மதுரை என்றவுடன் நம் மனக்கண் முன் வருவது மீனாட்சி அம்மன் ஆலயமாகும் . இவ்வாலயம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.  மீனாட்சியம்மை தன் திருக்கரங்களில் பச்சைக் கிளியினை ஏந்திய படி நிற்கின்றார் . இக்கிளி பக்தர்களின் வேண்டுதல்களை மீண்டும் மீண்டும் அம்மையிடம் கூறி பக்தர்களின் துயர் தீர உதவுவதாகக் கூறப்படுகிறது . இக்கோயில் எட்டு கோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் கொண்டுள்ளது. இதன் கருவறை விமானங்கள் இந்திர விமானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்கோயிலின் பொற்றாமரைக்குளம் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

வீரமங்கை வேலு நாச்சியார்(VELU NACHIYAR)

  ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய முதல் வீரப் பெண் வேலு நாச்சியார் . இவர் இந்திய சுதந்திரப் போரில் ஆண்களுக்கு நிகராகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டவர் . வேலு நாச்சியார் 1730 ம் ஆண்டு ஜனவரி 3 ம் தேதி செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதிக்கும், முத்தாத்தாள் நாச்சியாருக்கும் மகளாகப் பிறந்தார் . அக்காலத்தில் அரச குடும்பத்தினர் மத்தியில் ஆண் வாரிசு வேண்டும் என்கின்ற எண்ணம் மிகுந்திருந்தது . ஆனால் இராஜா செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி அவர்கள்,  தனது ஒரே மகளான வேலு நாச்சியாரை ஆண் குழந்தை போலவே வளர்த்தார் . வேலு நாச்சியாருக்கு தற்காப்பு கலைகள், ஆயுதப் பயிற்சி, போர்ப் பயிற்சி, வாட்பயிற்சி, குதிரையேற்றம், யானை ஏற்றம் போன்றவற்றைப் பயில்வித்து அருமையுடன் வளர்த்தார் .