ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய முதல் வீரப் பெண் வேலு நாச்சியார் . இவர் இந்திய சுதந்திரப் போரில் ஆண்களுக்கு நிகராகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டவர் . வேலு நாச்சியார் 1730 ம் ஆண்டு ஜனவரி 3 ம் தேதி செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதிக்கும், முத்தாத்தாள் நாச்சியாருக்கும் மகளாகப் பிறந்தார் . அக்காலத்தில் அரச குடும்பத்தினர் மத்தியில் ஆண் வாரிசு வேண்டும் என்கின்ற எண்ணம் மிகுந்திருந்தது . ஆனால் இராஜா செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி அவர்கள், தனது ஒரே மகளான வேலு நாச்சியாரை ஆண் குழந்தை போலவே வளர்த்தார் . வேலு நாச்சியாருக்கு தற்காப்பு கலைகள், ஆயுதப் பயிற்சி, போர்ப் பயிற்சி, வாட்பயிற்சி, குதிரையேற்றம், யானை ஏற்றம் போன்றவற்றைப் பயில்வித்து அருமையுடன் வளர்த்தார் .