Posts

Showing posts from December, 2025

இராமநாதசுவாமி திருக்கோயில் (RAMESWARAM TEMPLE)

Image
  இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்லும் புண்ணியத் தலம் இராமேசுவரம் ஆகும் . கடல் பரப்புகளால் சூழப்பட்ட சிறிய தீவுதான் இராமேசுவரம் . அழகிய கட்டிடக் கலைக்கும் , நுண்ணிய வேலைப்பாடுகள் மிக்க சிற்பக் கலைக்கும் சிறந்த சான்றாக இராமேஸ்வரம் விளங்குகிறது . இராமாயண காவியத்தின் பழமை எவ்வளவோ , அவ்வளவு பழமையானது இராமேசுவரம் ஆலயமாகும் .

இராமாயணம்-ஆரண்ய காண்டம் (பகுதி -2) RAMAYANAM- ARANYA KANDAM

Image
                 இராவணன், சூர்ப்பனகையின் மொழி கேட்டு சீதை மேல் ஆசை கொண்டான். எனவே சீதையை தூக்கி கொண்டு வர முடிவு செய்தான்.  இராவணன் தன் அமைச்சர்களோடு ஆலோசித்தான். பிறன் மனை அபகரிப்பது அழிவில் கொண்டு சேர்க்கும் என அமைச்சர்கள் கூற்றினை இராவணன் ஏற்கவில்லை. இராவணனின் தாய் வழி மாமன் மாரீசன். அவன் விசுவாமித்திரர் யாகம் செய்த போது, தொல்லை செய்ததால் இராமரின் அம்பு பட்டு கடலில் ஒளிந்து கொண்டான்.

இராமாயணம்- ஆரண்ய காண்டம் (பகுதி -1) RAMAYANAM- ARANYA KANDAM

Image
            இராமர், சீதையுடனும். இலக்குவனுடனும் தண்டகாரண்ய காட்டினுள் பயணத்தைத் தொடர்ந்தார். ஏராளமான புண்ணிய நதிகளில் நீராடியும், முனிவர்களின் ஆசிகளைப் பெற்றும் பயணத்தைத் தொடர்ந்தனர் . தண்டகாரண்யம் மிகப் பெரும் காடு. இங்கு பல ஆண்டுகள் பழமையான வானுயர்ந்த மரங்கள் நிறைந்துள்ளன. விந்திய, சாத்பூரா மலைகள் அருகே உள்ளன.