Posts

Showing posts from August, 2025

திருத்தணி சுப்ரமணியசுவாமி திருக்கோவில்

Image
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திருத்தணி திகழ்கின்றது . சூரனை வதம் செய்த பிறகு , முருகன் இங்கு வந்து சினம் தணிந்ததால் இத்தலம் " திருத்தணிகை " என்று பெயர் பெற்றது . பின்னர் அது மருவி திருத்தணி என வழங்கப்படுகிறது . முருகப் பெருமான் வள்ளி , தெய்வானையை மணம் செய்து கொண்ட தலம் இதுவாகும் . இத்தலம் 365 படிக்கட்டுகளைக் கொண்டு ஆண்டின் 365 நாட்களைக் குறிக்கின்றது . இவ்வாலயம் ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டதாகும் . அருணகிரி நாதரால் பாடல் பெற்ற தலம் இதுவாகும் . முருகனின் அறுபடை வீடுகளில் மிகப் பழமையான கோவில் இது என கூறப்படுகிறது . முருகப் பெருமான் சினம் தணிந்து அருளும் தலம் என்பதால் , திருத்தணியில் சூரசம்ஹார விழா நடைபெறுவதில்லை . இத்தலத்தின் தல விருட்சம் மகுட மரம் ஆகும் . தீர்த்தம் - சரவண பொய்கை , இந்திர தீர்த்தம் , சரஸ்வதி தீர்த்தம் என வழங்கப்படுகிறது . முருகப் பெருமான் வள்ளியை மணம் புரிந்த வரலாறு ; திருத்தணி மலைப் பகுதியில் உள்ள அடர்ந்த வனத்தில் வேடர்கள் குழுவாக ...

ஔவையும் முருகனும்

  தமிழ் போற்றும் பெண்பாற் புலவர் ஔவையார் . இவரின் சிறப்பியல்புகள் எண்ணற்றவை . தமிழறிவுடன் பிறந்த ஔவை கவி பாடுவதில் வல்லவர் . அறம் , பொருள் , இன்பம் , வீடு என அனைத்தும் உணர்ந்தவர் . தமிழ் இலக்கிய வரலாற்றில் ஔவையார் என்ற பெயரில் பெண்பாற் புலவர்கள் பலர் இருந்துள்ளனர் . முருகனுடன் பாடி உள்ளம் மகிழ்ந்த ஔவை சங்க காலத்தைச் சேர்ந்தவர் . இவர் அதியமான் காலத்தைச் சார்ந்தவர் . பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் " கொன்றை வேந்தன் " என்னும் நீதி நூலை எழுதி உள்ளார் . முருகப் பெருமான் மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து , ஔவையுடன் நிகழ்த்திய உரையாடல் பொருட் சுவை மிகுந்தது .   ஔவைப் பிராட்டி பாத யாத்திரையாக பல ஊர்களுக்கும் சென்று கவி பாடும் பண்பாளர் . ஒரு நாள் ஔவைப் பாட்டி அவ்வாறு சென்று கொண்டிருக்கும் போது , ஒரு நாவல் மரத்தின் அடியில் களைப்புடன் அமர்ந்தார் . நெடுந் தொலைவு பயணம் செய்து வந்ததில் அவருக்கு பசி எடுத்தது . அப்போது பசுமையான அந்த நாவல் மரத்தின் கிளையின் மேல் , மாடு மேய்க்கும் சிறுவன் அமர்ந்திரு...

கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தல்

சின்னக் கண்ணனின் குறும்புகள் அனைத்துமே படிப்பவர் , கேட்பவர் என அனைவர்   உள்ளத்தையுமே கவரக்கூடியது என்றால் அது மிகையாகாது . கிருஷ்ணரின் கதைகளில் ஒன்றினை இப்பதிவில் காண்போம் . விருந்தாவனத்தின் ஆயர்கள் இந்திரனுக்காக ஏற்பாடு செய்திருந்த யாகத்தினை கிருஷ்ணர் தடுத்து விட்டார் என அறிந்த இந்திரன் மிகவும் கோபம் கொண்டான் . எனவே இந்திரன் தனது கோபத்தை விருந்தாவனத்தின் மக்கள் மீது காட்டினான் . யாகம் நிறுத்தப்பட்டதற்கு கிருஷ்ணரே காரணம் என இந்திரன் அறிந்திருந்தாலும் , நந்த கோபர் ஆட்சியின் கீழ் உள்ள மக்களின் மேல் தன் கோபத்தைக் காட்டினான் . தானே மூவுலகுக்கும் அதிபதி என்ற கர்வம் கொண்டவனும் , கோபம் கொண்டவனுமான இந்திரன் பிரளயத்தைச் செய்யக் கூடியதுமாண " ஸாம் வர்த்தகம் " என்னும் மேகக் கூட்டத்தை அழைத்தான் . விருந்தாவணத்தின் மேல் படர்ந்து அப்பகுதி முழுவதையும் பெரு வெள்ளத்தில் மூழ்கடிக்கும் படி இந்திரன் " ஸாம் வர்த்தக " மேகத்துக்குக் கட்டளையிட்டான் . இவ்வாறு இந்திரனால் கட்டளையிடப்பட்டு ஏவப்பட்ட மேகக் கூட...