Posts

Showing posts from May, 2025

ஏகலைவன் (EKALAIVAN)

இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களுள் ஒன்று மகாபாரதம் . குரு பக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறப்படுபவன் ஏகலைவன் ஆவான் . ஏகலைவன் மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களுள் ஒருவன் . இவன் மகத நாட்டைச் சேர்ந்த வேடுவர் குலத் தலைவனின் மகன் ஆவான் . இவன் வாழ்ந்த இடம் அஸ்தினாபுரத்திற்கு அருகில் இருந்தது . வில் வித்தை கற்றுக் கொண்டு அதில் தேர்ச்சி பெற்றவனாய் விளங்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தான் ஏகலைவன் .

பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் ( BAVANI SANGAMESWARAR TEMPLE)

Image
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொன்மை வாய்ந்த ஆலயங்களில் ஒன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் ஆகும் . இவ்வாலயம் தேவாரப் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலமாகும் . இத்தல இறைவர் சங்கமேஸ்வரர் , அளகேசன் , சங்கமநாதர் , மருத்துவலிங்கம் , வானிலிங்கேஸ்வரர் , வக்கிரேஸ்வரன் , நட்டாற்றீஸ்வரன் , திருநண்ணாவுடையார் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார் . கோயிலின் தல விருட்சம் இலந்தை மரம் ஆகும் . இத்தல அம்மை வேதநாயகி , பவானி , சங்கமேஸ்வரி , பண்ணார் மொழியம்மை , பந்தார் விரலம்மை , மருத்துவ நாயகி வக்கிரேஸ்வரி எனப் பல பெயர்களில் அன்புடன் அழைக்கப்படுகிறார் . இத்தலத்திற்கு பத்மகிரி என்ற பெயர் உண்டு . இதைச் சுற்றிலும் நாககிரி , வேதகிரி , மங்களகிரி , சங்ககிரி உள்ளது . வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் தலம் திரிவேணி சங்கமம் என அழைக்கப்படுகிறது . இங்கு சரஸ்வதி கண்ணுக்குத் தெரிவதில்லை . அது போல தென்னகத்தில் காவிரியுடன் பவானி மற்றும் அமுத நதி ஆகிய மூன்று நதிகளும் இத்தலத்தில் சங்கமிக்கின்றன . இதில் அமிர்த நதி கண்ணுக்குத்...