திருவிடந்தை நித்திய கல்யாணப் பெருமாள் திருக்கோயில்

சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவிடந்தை என்னும் ஊரில் அமைந்துள்ள பழமையான கோயில் நித்திய கல்யாணப் பெருமாள் கோயில் ஆகும் . இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் . ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் , திருமணத் தடையை நீக்கும் தலமாக விளங்குகிறது . இக்கோயிலின் புராணப் பெயர் வராகபுரி ஆகும் . வராக பெருமாளின் அவதாரத்தைக் குறிக்கும் வகையில் இப்பெயர் அமைந்துள்ளது . தல வரலாறு காலவ முனிவர் என்பவர் வராகபுரியில் வாழ்ந்து வந்தார் . அவருக்கு 360 பெண் குழந்தைகள் இருந்தனர் . 360 பெண்களும் அழகிலும் , அறிவிலும் சிறந்து விளங்கியதுடன் , வராக மூர்த்தியிடம் மிகுந்த அன்பு கொண்டு திகழ்ந்தனர் . தனது பெண்களுக்கு திருமணம் ஆக வேண்டி காலவ முனிவர் , வராகப் பெருமாளைப் பிரார்த்தனை செய்து வந்தார் . அதற்காக கடுமையான தவம் செய்து வந்தார் . ஒரு நாள் வராகப் பெருமாள் , பிரம்மச்சா...