Posts

Showing posts from March, 2025

மச்சாவதாரம் (MACHA AVATHAARAM)

Image
  தசாவதாரத்தில் முதல் அவதாரம் மச்சாவதாரம் ஆகும். "உலகில் அதர்மம் அதிகமாகும் பொழுது, தர்மத்தினை நிலைநாட்டுவதற்காக நான் இப்புவியில் அவதாரம் எடுக்கின்றேன்" என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லுகிறார். வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டவர் பரம்பொருள் திருமால். இப்பூவுலகினைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்களை அவர் எடுத்தார். சிறப்புக்கள் மிக்க திருமாலின் அவதாரங்களை தசாவதாரம் என்று கூறுவர்.  திருமால் எடுத்த பத்து அவதாரங்களைப் பற்றி சுகப்பிரம்ம மகரிஷி, பரீட்சித்து மகாராஜாவுக்கு உபதேசம் செய்தார். அப்பொழுது சுகப்பிரம்மரைப் பார்த்து பரீட்சித்து மகாராஜா, "பிரம்ம ரிஷியே! எதற்காக ஹரிபகவான் ஒரு சாதாரண கர்மவசியனான புருஷனைப் போல, உலகத்தாரால் நிந்திக்கப்படக் கூடியதாகவும், தாமசப் பிரகிருதியாகவும், சகிக்கக் கூடாததாகவும் இருக்கின்ற மச்சரூபம் தாங்கி அவதாரம் செய்தார்" என்று கேட்டார்.   அதற்கு சுகப்பிரம்மர் கூறியதாவது:  "மகாவிஷ்ணு எடுத்த முதல் அவதாரம் இது. மச்சாவதாரத்தை மத்ஸ்யாவதாரம் என்றும் கூறுவார்கள்.   பிரம்மா சோர்ந்து தூங்கும் போது அவர் வாயிலிருந்து வேதங்கள் தாமே வெளிவந...

கும்பகர்ணன் வதைப் படலம்

      இராவணன்   கும்பகர்ணனை அழைத்து வருமாறு பணியாளரை அனுப்பினான் . அவர்கள் கும்பகர்ணன் அரண்மனையை அடைந்தனர் .

மகாபாரதத்தில் அம்பை (AMBA IN MAHABHARATA)

  இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். இதில் வரும் பெண் கதாபாத்திரமாகிய அம்பை பற்றி இப்பதிவில் காண்போம். அம்பை காசி மன்னனின் மூத்த புதல்வி ஆவார். அம்பிகா, அம்பாலிகா என்போர் இவளது தங்கைகளாவர். காசி மன்னன் தன் புதல்விகள் மூவருக்கும் திருமணம் செய்விக்க வேண்டி, சுயம்வரம் ஏற்பாடு செய்தார். பல அரசர்கள் காசிக்கு வந்திருந்தார்கள். அஸ்தினாபுரத்தில் இருந்து விசித்திரவீரியனும், அவனுக்குத் துணையாக பீஷ்மரும் காசிக்குச் சென்றிருந்தார்கள்.   விசித்திரவீரியன் இளைஞன் ஆதலால் அவனை அரசனாக வைத்து, அரச காரியங்களையெல்லாம் பீஷ்மரே செய்து வந்தார். பீஷ்மருடைய சொல்லை வேதவாக்காக ஏற்று விசித்திரவீரியன் அரசாட்சி புரிந்து வந்தான்.  காசி மன்னனின் சுயம்வர விழாவிற்குச் சென்றிருந்த பீஷ்மரைக் கண்டு, அங்கு வந்திருந்த மன்னர்கள் "கிழவராகிய பீஷ்மர் ஏன் வந்துள்ளார்? தனது பிரம்மச்சரிய விரதத்தை காற்றில் பறக்க விட்டார் போலும்" என மெல்லப் பேசிக் கொண்டார்கள். ஆனால் பீஷ்மர், காசி மன்னனின் மகள்கள் மூவரையும் விசித்திரவீரியனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியே சுயம்வர விழாவிற்குச் சென்றிருந்தார். இவ்வாறி...