Posts

Showing posts from November, 2024

இலட்சுமணனின் வீரமும் தியாகமும்(LAKSHMAN'S SACRIFICE)

Image
  இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களுள் ஒன்று இராமாயணம் . இராமாயணக் காதையில் இராமருக்கு பக்கபலமாகவும் , துணையாகவும்   இருந்த இலட்சுமணனைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம் . இவர் ஆதிஷேசனின் அவதாரம் ஆவார் . இராமாயணத்தில் கூனியின் துர்போதனையைக் கேட்டு கைகேயி இராமரைப் பதினான்கு வருடம் வனவாசம் செல்லப் பணித்தாள் . இராமர் பதினான்கு வருடம் வனவாசம் செல்ல முடிவு செய்த போது , அவருக்குத் துணையாகத் தானும் வருவதாக இலட்சுமணன் கூறினார் . இராமரும் தம் தமையனின் அன்பின் மிகுதியை எண்ணி , இலட்சுமணனைத் தன்னோடு கானகம் அழைத்துச் செல்ல சம்மதம் தெரிவித்தார் . எனவே சீதா இராமரோடு இலட்சுமணனும் மரவுரி தரித்து , கானகம் புறப்பட்டார். இலட்சுமணன் தன் மனைவியாகிய ஊர்மிளையிடம் , இராமரோடு தான் கானகம் செல்லும் செய்தியைக் கூறினார் . உடனே ஊர்மிளை தானும் இலட்சுமணனோடு   வருவதாகத் தன் விருப்பத்தைத் தெரிவித்தாள் . அதற்கு   இலட்சுமணன் ஊர்மிளையிடம் , தான் இராமருக்கும் , சீதைக்கும் துணையாக கானகம் செல்வதாகவும் , வனத்தில் அவர்களுக்கு ஏற்படும் ஆ...

சென்னையின் வரலாறு (HISTORY OF CHENNAI)

Image
சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம் என்பதோடு அல்லாமல் இந்தியாவின் முதல் மாநகராட்சி என்ற பெருமையையும் கொண்டது . சென்னை வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த ஒரு துறைமுக நகரம் ஆகும் . 17 ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் கால் பதித்தது முதல் சென்னை முக்கிய நகரமாக வளர்ந்து வருகின்றது . ' வந்தாரை வாழ வைக்கும் சென்னை ' மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது . 1639 ம் ஆண்டு ஆகஸ்டு 22 ம் தேதி , தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் சென்னை உருவானது . அன்றைய தினம் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே , ஆண்ட்ரு கோகன் ஆகியோர் , இப்போது புனித ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள் . ஓராண்டிற்குப் பின் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது . அந்தக் கோட்டையை மையமாகக் கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது . கிழக்கிந்தியக் கம்பெனி , புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்ட தேர்வு செய்த இடத்தில் சென்னப்பட்டினம் , மதராசப்பட்டினம் என்ற இரண்டு கிராமங்கள் இருந்துள்ளன . இந்த இரண்டு ஊர்களின் இணைப்பில் உருவான நிலப்பரப்பே த...

திருப்பாண்டிக் கொடுமுடி (KODUMUDI TEMPLE)

Image
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம் சிறப்புக்கள் பல கொண்ட தொன்மை வாய்ந்த ஆலயம் ஆகும் . தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக பாண்டிக் கொடுமுடி விளங்குகிறது . இவ்வாலயத்தின் தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது . இம்மரம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது . ஆனால் சிலர் இம்மரம் அதையும் விட பழமையானது என்றும் , இதன் வயதைக் கணக்கிட முடியவில்லை என்றும் கூறுகின்றனர் . இவ்வாலயத்தில் சிவன் , பிரம்மா , திருமால் ஆகிய மும்மூர்த்திகளும் கோவில் கொண்டிருப்பது சிறப்பு மிக்கதாகும் . மகுடேஸ்வரர் சன்னிதிக்கும் , வடிவுடைய நாயகி சன்னதிக்கும் நடுவில் வீர நாராயணப் பெருமாள் - மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன . மேலும் வன்னி மரத்தடியில் பிரம்மாவின் சன்னதி அமைந்துள்ளது . திருவண்ணாமலையில் மலையே சிவனாக இருப்பதாக ஐதீகம் . அது போல , இங்கு மலையின் முடியே சிவலிங்கமாக காட்சியளிப்பதால் , இத்தலம் கொடுமுடி என்று அழைக்கப்படுகிறது . இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாவார் . மலையத்துவச பாண்டியன் இக்கோவிலுக்கு மூன்று க...