Posts

Showing posts from April, 2025

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோயில் (THIRUCHENDUR MURUGAN TEMPLE)

Image
முருகனின் அறுபடை வீடுகளில் , இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் விளங்குகின்றது . இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களில் " சேயோன் " எனக் குறிப்பிடப்படுகிறது . சங்க இலக்கியங்களிலும் , சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000, 3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது . முருகப் பெருமானின் படை வீடுகள் அனைத்தும் மலைகளில் அமைந்திருக்க இத்திருத்தலம் வங்காள விரிகுடா அருகில் அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பு ஆகும் . திருச்செந்தூர் என்றால் செழிப்பான நகரம் என்று பொருள் . தமிழ் இலக்கியங்களில் திருச்சீரலைவாய் செந்தில் மாநகரம் என்றும் , சமஸ்கிருத நூல்களில் ஜெயந்தி புரம் , சிந்துபுரம் என்றும் , பிற்கால பாண்டியர் கல்வெட்டுகளில் திருபுவன மகாதேவி சதுர்தேவி மங்கலம் என்றும் , திருப்புகழில் திருச்செந்தூர் என்றும் பல்வேறு பெயர்களில் வழங்கப்படுகின்றது . நக்கீரர் , அருணகிரி நாதர் போன்றோர் திருச்செந்தூர் முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளனர் . தல வரலாறு அக்காலத்தில் தேவர்களுக்கு அசுரர்கள் பல ...

கேதார்நாத் ஆலயம் (KEDARNATH TEMPLE)

Image
  இந்தியாவில் உள்ள பன்னிரண்டு சோதிர்லிங்க சிவத்தலங்களில் ஒன்று கேதார்நாத் கோவில் ஆகும். இவ்வாலயம் உத்திராகாண்ட் மாநிலத்தில், மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஆறு மாதங்கள் மட்டுமே (ஏப்ரல் மாதம் முதல் தீபாவளித் திருநாள் வரை) பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டிருக்கும். குளிர் காலங்களில் கோயிலில் உள்ள விக்கிரகங்கள் குப்தகாசியில் உள்ள உகிமத் மடத்திற்கு கொண்டு வரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன.   இக்கோவில் கங்கையின் கிளை நதிகளுள் ஒன்றான மந்தாகினி நதிக்கரையோரம் அமைந்துள்ளது. கோவிலானது கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் பனிபடர்ந்த மலைகளும் பனியாறுகளும் சூழ்ந்த பீடபூமி மீது அமைந்துள்ளது. இக்கோவிலை நேரடியாக சாலை வழியாக அணுக முடியாது. கௌரிகுண்ட் என்னுமிடத்திலிருந்து 14 கி.மீ நடைபயணமாகவோ அல்லது குதிரையிலோ அல்லது பல்லக்குச் சேவைகளின் மூலமாகவோ மேற்பகுதிக்குச் செல்ல வேண்டும். இக்கோவில் திருஞான சம்பந்தராலும், சுந்தரராலும் தேவாரப் பாடல் பாடப் ப...