Posts

Showing posts from October, 2024

காபி பற்றிய சுவையான தகவல்கள் (INTERESTING FACTS ABOUT COFFEE)

Image
நாம் தினமும் காலையில் சுவைத்து மகிழும் காபி , நமக்கு புத்துணர்வையும் , ஆற்றலையும் அளிக்கிறது . காபி முதன் முதலில் எவ்வாறு கண்டறியப்பட்டது என்னும் செய்தி நமக்கு வியப்பையும் , ஆச்சரியத்தையும் அளிக்கலாம் . உலகிலேயே அதிக அளவு இறக்குமதி , ஏற்றுமதி செய்யப்படும் பொருளாக பெட்ரொலியம் உள்ளது . அதற்கு அடுத்த படியாக உலகிலேயே அதிகமாக விற்று , வாங்கக் கூடிய பொருளாக காபி இரண்டாவது இடத்தில் உள்ளது . காபி உலகில் ஐம்பதுக்கும் அதிகமான நாடுகளில் ஏறக்குறைய 10 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது . இன்று 100 மில்லியன் மக்களின் வாழ்க்கை ஊதியம் காபிப் பயிரை ஒட்டி நடக்கிறது . தினமும் தோராயமாக 2.25 பில்லியன் கோப்பை ( cup) காபிகள் உலகம் முழுவதும் உள்ள மக்களால் சுவைக்கப்படுகின்றன . காபி எவ்வாறு உலகுக்கு அறிமுகமானது ? அந்த சுவையான கதையை இனி பார்ப்போம் . ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர்கள் சிலர் ஒரு நாள் , தங்கள் ஆடுகளில் சில அதிக ஆட்டத்துடன் உலாவி வந்ததையும் , இரவிலும் தூங்காமல்...

சென்டினல் மக்கள் ( THE SENTINELESE)

Image
யார் இந்த சென்டினல் மக்கள் ? இவர்கள் எங்கு வாழ்கிறார்கள் ? இந்தியப் பெருங்கடலில் உள்ள அந்தமான் நிக்கோபர் தீவுகளில் ஒன்று தான் வடக்கு சென்டினல் தீவு . இங்கு வாழும் மக்களே சென்டினல் பழங்குடியின மக்கள் . இவர்கள் வெளியுலக மக்களைப் பார்க்க விரும்பாமல் அந்தமான் தீவின் அடர்ந்த காடுகளில் வாழ்கின்றனர் . இப்பழங்குடியின மக்கள் வில் அம்பு கொண்டு காட்டு விலங்குகளை வேட்டையாடி உண்டு வாழ்கின்றனர் . சென்டினல் மக்கள் வெளி உலக மக்களிடம் தொடர்பு கொள்வதை வெறுக்கிறார்கள் . இந்திய அரசாங்கம் இம்மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு , அத்தீவிற்கு யாரும் செல்லக் கூடாது என தடை விதித்துள்ளது . வெளி உலக தொடர்பின்றி வாழும் அப்பழங்குடியின மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் , இச்சட்டதை இந்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. 2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலை இம்மக்களைப் பாதிக்கவில்லை . அவர்கள் முன் கூட்டியே சுனாமி வருவதை அறிந்து , உயரமான பகுதிகளிலும் , மரங்களின் மீது ஏறியும் உயிர் பிழைத்துள்ளனர் . சென்டினல் பூர்வீக பழ...