Posts

Showing posts from February, 2024

நளதமயந்தி கதை (NALA THAMAYANDHI STORY)

மகாபாரதத்தில் வரும் ஒரு கிளைக் கதையே நளதமயந்தி கதை ஆகும். இக்கதையைக் கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் சனி பகவானின் பாதிப்பு குறையும் என்னும் நம்பிக்கை நிலவுகிறது. இனி கதையினுள் செல்வோம்.  நெடுத நாட்டு மன்னன் வீரசேனன். இவரது மகன் நளன். ஒரு நாள் நளன் அரண்மனைத் தோட்டத்தில் உலாவி வந்த போது, ஓர் அழகிய அன்னப்பறவை பறந்து வந்து அவனது அருகில் நின்றது. நளன் அப்பறவையின் அழகினைக் கண்டு வியந்தான். நளன் மேலும் ஆச்சரியம் அடையும் வகையில் அப்பறவை இனிய மொழியில் பேசியது.   அன்னப்பறவை நளனிடம் "மன்னா! நீ பேரழகு உடையவனாகவும், அறிவாற்றல் உடையவனாகவும், மக்களின் நலனில் அக்கறை உடையவனாகவும் விளங்குகிறாய். நற்குணங்கள் உள்ள உனக்கு மனைவியாக வரும் பெண்ணும் அழகாகவும், அறிவுடையவளாகவும், குணவதியாகவும் இருக்க வேண்டும். அப்படிபட்டப் பெண் ஒருத்தி இருக்கிறாள். அவள் பெயர் தமயந்தி" என்று கூறியது. மேலும் தமயந்தியின் அழகினை வர்ணித்தது. இதனைக் கேட்ட நளன் தமயந்தியைப் பார்க்காமலேயே அவள் மேல் காதல் கொண்டான். அப்போது அந்த அன்னம் நளனிடம், "தமந்தியிடம் தூது செல்லவா?" எனக் கேட்டது. அதற்கு நளனும் சம்மதம் த...

அங்கோர்வாட் கோயில் - கம்போடியா (Angkor wat temple- Cambodia)

உலகின் மிகப் பெரிய கோயிலாக 'அங்கோர்வாட்' விளங்குகிறது. சூரியவர்மன் என்னும் மன்னரால் விஷ்ணு பகவானுக்காகக் கட்டப்பட்ட பிரமாண்டமான கற்கோவில் இதுவாகும். சூரியவர்மன் இராஜ ராஜ சோழனின் நெருங்கிய நண்பன் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 11 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இவ்வாலயம் சூரியவர்மனின் ஆட்சிக்குப் பிறகு, புத்தரின் ஆலயமாக மாற்றப்பட்டது. இவ்போது கோவிலின் மையப்பகுதியில் கோபுரத்தின் கீழ் இருப்பது புத்தரின் சிலையே ஆகும்.   இந்த மாபெரும் ஆலயம் 400 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்டதாக விளங்குகிறது. அங்கோர்வாட் என்பதன் பொருள் 'கோவில் நகரம்' என்பதாம். இக்கோவிலைக் கட்ட 40 ஆண்டுகள் ஆனதாகக் கூறப்படுகிறது.  கோவிலின் அமைப்பு  முற்றிலும் கற்களால் கட்டப்பட்ட இக்கோவில், மேற்கு பார்த்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.கோவிலைச் சுற்றி 5 கிலோமீட்டர் சுற்றளவுள்ள அகழி உள்ளது. இதன் ஆழம் 13 அடி. பல ஆயிரம் மக்களின் உழைப்பினால், 53 மில்லியன் கன அடி மணல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. பெரிய கோவிலின் நிலத்தடி நீரைப் பாதுகாக்க இது உதவுகிறது.  அகழிக்கு முன்னால் சிங்கங்களின் சிலைகள் அமைக்கப...