மயிலாப்பூர் கபாலிஸ்வரர் ஆலயம் (KAPALEESWARAR TEMPLE)
சென்னையில் உள்ள முதன்மையான ஆலயங்களில் ஒன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயமாகும் . மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகிறது . இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டதாகும் . மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இத்தலம் மிகவும் புகழ் பெற்று விளங்கியதாகக் கூறப்படுகிறது .